Wednesday, 26 February 2020

திருவள்ளூர் சரவணன் ஆர்வமான வளரும் தொழில்முனைவர் திருவள்ளூர் டைம்ஸ் என்ற பத்திரிக்கையின் கர்த்தா!!கமரசியல் கிச்சன் கிளீன் செய்து தரும் சேவை தொழிலையும் செய்து வருகிறார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெனிசன் ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் மாத தவணைதிட்ட விற்பனையில் நான் தலைமை முகவராக இருந்த பொழுது எனக்கு உப முகவராக திருவள்ளூரில் 30 மனைகளை மாத தவணையில் பிடித்துகொடுத்து முப்பது பேருக்கும் தொடரந்து பணம் கட்ட வைத்து பத்திரம் முடித்து கொடுத்து அவரகளுக்கு பட்டா வாங்கி கொடுத்து ஆண்டுக்கு ஒரு முறை அவருடைய வாடிக்கையாளர் மனைகளை பார்வையிட்டு திருவள்ளூரில் இருந்து கிளம்பும
போதே பெயிண்ட் பிரஷ் எல்லாம் கொண்டு போய் எல்லா கல்லுக்கும் பெயிண்ட் அடித்து நம்பர் போடுவார்.விழுந்த கல்லை நிமிர்ந்தி வைப்பார்.திருநெல்வேலி முனைஞ்சபட்டி மனைபிரவில் இவர் டீமினுடைய 30 பிளாட்டுகள் தான் பளிச்சென்று இருக்கும்.
இடம் வாங்கி கொடுத்து வாங்கிய கமிசன் மாதந்தோறும் 50 ரூபாய் அதுவும் 2012 ஆண்டோடு முடிந்துவிட்டது நான் விற்றுகொடுத்த 1200 மனைகளுக்கு இன்று வரை என்னுடைய பணத்தை செலவு செய்து தொடரந்து பட்டா வாங்கி தருகின்ற வேலை மனைபிரவுகளை பாரவையிடுகின்ற வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.எனக்கு அடுத்து அதே போல தம்பி சரவணனும் செய்து கொண்டு இருக்கிறார்.விற்றோமா போனோமா என்று முகவரகள் இருக்கிற நேரத்தில் இது போன்ற வாங்கிய பணத்தை விட அதிக வால்யூ கொடுக்கும் தொழில்முறைவர்களால் தான் வியாபாரம் நிலைத்து நிற்கிறது.
பல பேருடன் தவணைதிட்டத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.ஒரு சிலர் யாருக்கு எல்லாம் மாத தவணையில் இடம் வாங்கி கொடுத்தோம் என்ற பெயர் பட்டியல் கூட வைத்து இருக்க மாட்டாரகள்.
ஒரு சிலர் கமிசன்தான் முடிந்து விட்டதே இதுக்கு மேல கஸ்டமர்க்கு சேவை கொடுக்க முடியாது என்று சொல்லுவாரகள்
ஒருசிலர் சோத்துக்கு வாழ்க்கைசெலவுக்கு வழி இல்லாத போது மாத தவணைதிட்டத்தில் முகவராகி சுறுசுறுப்பாக உழைத்து வசூல் செய்துவிட்டு மாதந்தோறும் கமிசன் பாரக்க ஆரம்பித்தவுடன் அவர்களை வைத்தே மாத சீட்டு ,வட்டிதொழில்,தீபாவளி பண்டு நோனி டானிக் விற்பனை நகை விற்பனை,டைம் ஷேர் விற்பனை,மூலிகைவிறபனை என பிஸினஸ் செய்து தான் பொருள் ஈட்ட மட்டும் வேலை செய்வார்கள்.மனைபிரிவு திட்டத்தில் சேரந்த வாடிக்கையாளருக்கு பத்திரம்போடனும் பட்டா வாங்கனும் பாதுகாத்து கொடுக்கனும
என்று சிந்தனையே இருக்காது.ஆனால் ரியல்எஸ்டேட் விசிட்டிங்காரடு இருக்கும் ரியல் எஸ்டேட் வாயிலே செய்து கொண்டு இருப்பாரகள.உடல் உழைப்பே கொடுக்காமல்
உடல் பெருத்து ஓடிஆடி அலையாமல் உட்காரந்து சாப்பிட்டு களபணி களநிலவரம் தெரியாமல் நாட்களை ஓட்டிகொண்டு இருக்கின்றனர்
அப்படி இருக்கின்ற மாத தவணைதிட்ட முகவரகள் மத்தியில் தம்பி மணிவைரம்
அதனால்தான் எப்போதும் 20 பேருக்கு வேலை கொடுக்கிறார்.பெரிய ஆளாய் தம்பி வரனும் உரைப்பால் உயரனும்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர-ரியல்எஸ்டேட் ஆலோசகர்
9962265834
www.paranjothipandian.in

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...