Thursday, 18 November 2021

பர்கூர சார்பதிவகத்தில் நமது அண்ணன்!

 பர்கூர சார்பதிவகத்தில் நமது அண்ணன்!



தமிழகம் முழுவதும் பல்வேறு சார்பதிவகங்களில் நமது அண்ணன் தம்பிகள் பலர் ஆவண எழுத்தர் தொழில் முனைவர் ஆகி கொண்டு இருக்கிறார்கள்!
கடந்த 30 ஆண்டுகளாக உலகமயமாக்கல் நடந்ததில் இருந்து சொத்து விலை ஏற ஏற அதிக மோசடி பத்திரங்கள் நடத்துவிட்டது அதனை எல்லாம் இப்பொழுது சீர் செய்ய அந்த சொத்துகளின் டைட்டிலை சரி செய்ய இளமையான துடிப்பான உடலும் ஆழ்ந்து வாசிப்பு பழக்கமும் ஆவண எழுத்து தொழில் முனைவோருகளுக்கு நல்ல வாய்ப்பு வருங்காலத்தில் இருக்கிறது. அப்படி பட்டவர்கள் நிச்சயம் ஆவண எழத்தர் தொழில் முனைவோர் ஆக பாருங்கள்!
பர்கூர சார்பதிவகத்தில் அண்ணன் மஞ்சுநாத் அவர்கள் தனது ஆவண எழுத்தர் தொழிலை ஆரம்பித்து இருக்கிறார்.அன்னார் என்னிடம் ஆவண எழுத்தர் பயிற்சி மாணவராக இருந்தார் என்பது எனது மாணவர் என்பதும் எனக்கு சின்ன பெருமை! நிச்சயம் பெறும் வெற்றி பெறுவார்கள் அண்ணா! அறிவுடன் கூடிய உழைப்பு வாங்கும் கட்டணத்தைவிட அதிக சேவையை கடைபிடியுங்கள்.
சார்பதிவாளர் மாவட்ட பதிவாளர் பதிவுதுறை ஐஜி டிஐஜி மனைவிமார் குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டு வேலைகள் வெளியூர் பயணங்கள் செய்யும் பொழுது பயண வேலைகள் பார்த்து சொம்படித்து சொம்படித்து தொழில் செய்தவர்களை காலம் மலையேற போகிறது இருக்கின்ற 576 மேலான சார்பதிவகத்தில் வாய்ப்புகள் இருக்கிறது. நிச்சயம் எல்லா சார்பதிவகத்திலும் நம் சகோதர்ரர்கள் தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்ற கனவு மெதுவாக மெய்பட்டு கொண்டு இருக்கிறது.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9962265834/9841665836

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...