Thursday, 26 March 2020

என் டீமை அதிகமாக கடுமையாக உழைக்க வைக்க போகும் கொரானவே நன்றி!!


என் டீமை அதிகமாக கடுமையாக உழைக்க வைக்க போகும் கொரானவே நன்றி!!
நமது நிறுவனத்தை வெற்றிகரமாக நாம் நடத்த வேண்டும்.அரசாங்கம் பலவேறு விதங்களில் விதிகள் சட்டங்கள் கட்டுபாடுகள் வரன்முறை படுத்துதல் என்ற பெயரில் தொல்லை கொடுத்து கொண்டே இருக்கிறது.
வரி என்ற பெயரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகமாக பணத்தை உறஞ்சுகிறது.நன்றிகெட்ட மனிதரகள் பலரிடம் நம் பணம் நம் உழைப்பும விரயங்கள் ஆகிகொண்டு இருக்கிறது.உழைப்பை கொடுத்து உருவாக்க படும் வியாபாரத்தை பொறாமை எண்ணங்களால் முடக்கும் நண்பரகள்,
வியாபரத்தில் work ஆர்டர் எடுப்பவரகள் வியாபாரம் செயபவரகள் கையில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்கிறாரகள்.வாடிக்கையாளரகள் முதல் போட்டு உதவி செய்தவரகள் உணர்ச்சிகரமான வேதனையிலும் வலியிலிம் இருப்பவரகள் கொடுக்கன்ற தொல்லைகள்.
ஊழியரகள் குழுவினரகள் கற்றுகொளவதும் காலமாற்றத்தினால் காலவாதி ஆனதை மறக்கவும் சிரம்படும் அதர பழசுகள்,கொஞ்சம் உழைத்தால் அதிகம் பலன் அடைய வேண்டும் என்ற முகவரகள்,விரைவில் பணக்கார்ராக வேண்டும் என்று அவசரபட்டு விவரம் தெரியாமல் என்னிடம் சண்டைபோடும் தங்க முட்டை மொத்தமாக கிடைக்க வாத்தை அறுக்கும் முட்டாள்கள் என்று பலரிடம் பயணபட்டு மனகாயம் பட்டு 2003 இல் இருந்து இன்று தேதிவரை வியாபார நிறுவனத்தை நடத்திவிட்டேன்
ஒரு தொழில் முனைவோராக பலர் வீட்டில் பொருளாதார விளக்கை ஏற்றி வைத்து இருக்கறேன்.என்னுடைய உழைப்பின் பணம் பங்கு தொகைகள் முடக்கி வைத்து இருப்பவரகளை கேட்டு சண்டைஇட்டு நின்று கொண்டு இருக்க நேரமில்லாமல் ஓடி கொண்டு இருந்தருக்கிறேன்.
வங்கி உட்பட நிதிநிறுவனங்கள் உதவி இல்லாமல் தண்டல்கார்ர் உதவியால் கடன் எடுத்து அதிக வட்டி கொடுத்து உழைத்து இருக்கறேன்.இந்த தொழில் முனைவிஅதற்காக சொந்த அபிலாஷைகளை மறந்து இருக்கறேன்.
எனக்கு சொந்த அபிலாஷைகள் இல்லை என்று என்னை மனிதனாக பார்க்காத குழுவினரிடையே பயணித்து இருக்கிறேன்.கடந்த 2 வருடங்களாக வியாபார திட்டங்களை மக்களுக்கானதாக மாற்றி இருக்கறேன்.டீம் மெம்பரகளை அதிகமாக
உழைக்க சொல்லி சொல்லி அவரகள் பரீட்சைக்கு முதல் நாள் படிக்க புக் எடுக்கும் சர்வைவல் மைண்ட் உடையவரகளாகவே இருந்தருக்கிறாரகள்.
இதோ இப்பொழுது அதிகாமாக உழைக்க வேண்டிய காலம் வந்து விட்டது.இந்த கொரானாவால் இன்னும் பல காரணஙரகளால் பணமுடக்கம் பொருளாதார வீழ்ச்சி நடைபெறும் என்று தோன்றுகிறது.அரசு வேலையில் நிம்மதியாக சம்பளம் வாங்கலாம் என்பவரகளுக்கு அவையைல்லாம் சம்பளம் போட முடியாமல் கலைக்கபட்டாலும் ஆச்சரியம் இல்லை!! அந்த அளவுக்கு நிலமை மோசமாகும் போல, இப்படிபட்ட சூழலில் தான் அதிகமாக வேலை செய்வாரகள் என்று உணர்கிறேன்.
கொரானா நோய்கொடுக்கிதோ இல்லையோ கண்டிப்பாக பொருளாதார வீழ்ச்சியை்கொடுக்கும்.அப்பொழுதுதான் கடனை அடைக்க வாடகை கொடுக்க படிக்க வைக்க என்று அதிகமாக survival mode இல் என் குழுவனரும் உழைக்க ஆரம்பிப்பாரகள்.
இனதான் மனரீதியாக உணர்ச்சி ரீதியாக ஆன்ம ரீதியாக உடல் ரீதியாக உழைக்கும் டீமை பெற போகிறேன் !!
நன்றி நென்டீமை பேரை அதிகமாக உழைக்க வைக்க போகும் சின்னசிறிய கொரானாவே!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
9962265834


No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...