Friday, 3 August 2018

உயர்நீதிமன்றத்தில் ஒரு உயர்வான வழக்கறிஞர்!


2001 களில் இருந்து அவர் எனக்கு அறிமுகம்.தீவிர மக்கள்பணி,இயக்கபணிகள் நான் வந்த காலத்திலும்,ரியல்எஸ்டேட் தொழிலில் முழுமையாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்ற காலத்திலும் ஏன் இன்றுவரை
நிலசிக்கல்கள்,குடும்ப பிரச்சனைகள் என நான் சந்திக்கும் நடுத்தர வசதி கொண்ட மக்கள் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள்.
அவர்களுக்கு எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு மேலதிக விவரங்களுக்கு அவரின் தொலைபேசி எண்ணை நான் கொடுத்து தொடர்பு கொள்ள சொல்வேன்.அவரும் அவர்களுக்கு வேண்டிய விஷயங்களை செய்து கொடுத்திருப்பார்.அவரிடம் சென்று வந்த என் நண்பர்கள் அனைவருமே ஒரு நல்ல வழக்கறிஞரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி என்று என்னிடம் கூறி இருக்கிறார்கள்.!!
பெரும்பாலும் நடுத்தர மக்கள் வழக்கறிஞர்களை பற்றி உயர்வான எண்ணம் கொண்டவராக இருப்பதில்லை.
1.தேவைக்கு அதிகமாக கட்டணம் வாங்கபடுகிறது என்ற எண்ணம்.
2.மறைமுகமாக கட்டணம் வசூலிக்க வசூலிக்கபடுகிறது.
3.வாய்தாவுக்கு போனாலே வக்கீல் பீஸ் கேட்டு நச்சரிப்பார் என்று பயந்து கொண்டே நீதிமன்றம் போகாமல் இருப்பது
4.பிறகு அந்த வழக்கில் சிக்கல்கள் எழும்பினால் மீண்டும் வழக்கறிஞர்களிடம் நடையாய் நடப்பது
5.சில இடங்களில் வழக்கறிஞரை பின் தொடர்தல் இல்லை என்றால் அவ்வழக்கும்அப்படியே தேங்கி நிற்கும்
6.எதிர்தரப்புக்கு வழக்கறிஞர் சாதகமாகி விடுவது
7.வழக்கை தாமதபடுத்துகிறார்,இழுக்கிறார்
இப்படி பல எண்ணஓட்டங்கள் வழக்கறிஞர் பற்றி நடுத்தர மக்களிடையே நிலவுகிறது.இதுபோன்ற எந்த எண்ண ஓட்டங்களும் எந்தவித அச்சமும் இந்த வழக்கறிஞரிடம் நிச்சயம் இருக்காது.
பல இளம்வழக்கறிஞர்களை உருவாக்கி இருக்கிறார்.பல வழக்கறிஞர்கள் இவருடைய தளத்தை பயன்படுத்தி வளர்ந்துள்ளனர்.பல வழக்கறிஞர் நண்பர்களை தமிழகம் முழுதும் நான் பெற்று இருந்தாலும் பல நேரங்களில் மனதிற்குள் ஒப்புமைபடுத்தி பார்க்கும் போது எனக்கு இவர் மேலானவராக தெரிவார்.
பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பிரச்சினைகளை உள்வாங்குவது ஆகட்டும்,Draft போடுவது ஆகட்டும்,அர்ப்பணிப்புடன் வழக்கு நடத்துவது ஆகட்டும் எல்லாவற்றிலும் ஒரு உயிரோட்டமும் நேர்மறைசிந்தனையும் உண்மையும் இவ்வழக்கறிஞரிடம் இருக்கும்.
வழக்கறிஞர்கள் விளம்பர தம்பட்டங்கள் செய்யகூடாது என்பதை உணர்ந்தவர்,அரசியல் கட்சியோ மதசார்போ அற்றவர்.பொது பிரச்சினைகளை எடுத்து பேசி ஊடங்களில் விளம்பரம் தேடாதவர்.
அதனால் நல்ல வழக்கறிஞர் சேவை தேவைபடுபவர்களுக்கு கொஞ்சம் தெரியாமல் இருக்கிறார்.அவருக்கும் நான் இப்படி வலைபூவில்(BLOG) எழுதுவேன் என்று தெரியாது.ஆனால் நிறைய இளையதலைமுறையினருக்கு நல்ல வழக்கறிஞர் யார் என்று பரிந்துரைப்பது அவசியம் ஆகிறது.கிட்டதட்ட 18 ஆண்டுகாலமாக அந்த வழக்கறிஞரின் சேவையை நான் பெறுவதாலும்,உயர்நீதிமன்றத்தில் உயர்வான வழக்கறிஞர் என்று நான் உணர்வதாலும் இதனை படிக்கின்ற வாய்ப்பு இருக்கின்ற நண்பர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
இவ்வளவு சொல்லிவிட்டு ஆளையும் பேரையும் அட்ரஸையும் சொல்ல வில்லை என்றால் எப்படி?
கடந்த 20ஆண்டுகளாக கீழ்கண்ட முகவரியில் இருக்கிறார்.
வழக்கறிஞர்.திரு.V.சிவலிங்கம்,32/1,சடையப்பன் தெரு,
மந்தவெளி,சென்னை-28
போன்:9499921296
இ-மெயில்:ariyasiva1975@gmail.com

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...