Monday, 13 August 2018

மதுராந்தகம்-சென்னையின் புதிய நுழைவாயில்


மதுராந்தகம் இன்னும் 10 ஆண்டுகளில் சென்னையின் தெற்கு நுழைவாயிலாக ஆகிவிடுவதற்கான அனைத்து +Infrastructure) கட்டமைப்பு பணிகளும் மேம்பட்டு வருகிறது.

தாம்பரம்-செங்கல்பட்டு சாலை அடர்த்தியும் நெருக்கடியும் அதிகமாகி விட்டதனால் சென்னையில் இருந்து சேலம்,கோவை,கேரளா செல்லும் வாகனங்கள் வண்டலூரில் பிரிந்து ஒரகடம்-காஞ்சிபுரம்-திருவண்ணாமலை வழியாகசெல்ல 8வழி சாலை அமைகக்கபடவிருக்கிறது.
ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர்.பகுதிகளில் இருப்பவர்கள் சென்னையை விட்டு வெளியேறி தமிழகத்தின் பிற மாவட்டங்களை அடைய இதுவரை தாம்பரம் -செங்கல்பட்டு சாலையை இதுவரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் புதியதாக அமைத்து கொண்டு இருக்கிற திருப்போருர்-மானம்மதி-திருகழுகுன்றம்-பூதூர்-கக்கலபேட்டை-மதுராந்தகம் ஆறுவழிபாதை மதுராந்தகத்தை சென்னையின் புதிய நுழைவாயிலாக உருவாக்கும்.
மாமல்லபுரம் -பாண்டிசேரி ECR சாலை 4 வழிபாதையாக மாற்றம் அடைவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றனர்.ECR கூவத்தூரில் இருந்து மதுராந்தகத்திற்கான பாதையையும் விரிவுபடுத்த முன்னெடுப்பு வேலைகள் நடந்து வருகின்றன.

சென்னை ஏர்போர்ட் இல் இருந்து மதுராந்தகம் வரும் நேரமும் பாண்டிசேரி ஏர்போர்ட்டில் இருந்து

மதுராந்தகம் வரும் நேரமும் ஒன்றாகிவிட்டது.சித்தாமூர்,செய்யூர்,மேல்மருவத்தூர்,மதுராந்தகம் பகுதிகளில் உள்ள கிராமங்களின் நிலங்களை ஒருங்கிணைத்து புதிய கீரீன் பீல்டு ஏர்போர்ட் வருவதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் சுற்றி வருகின்றன.நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளது.
மிக பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமான மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோயில் வையாவூர் திருமலை திருகோயில் ,மேல்மருவத்தூர் சக்திபீடம்,ஓணம்பாக்கம் சமணர்கோயில்,அச்சிறுபாக்கம் மலைமாதாகோயில் போன்ற கோயில்களால் மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆன்மீக யாத்ரிகர்கள் விரும்புகின்ற பகுதியாக மாறுகிறது.

கற்பக விநாயக மருத்துவ கல்லூரி, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, செங்கல்பட்டு சட்ட கல்லூரிஎன பெரிய கல்லூரிகள் மற்றும் சிறிய கல்லூரிகள் பல மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ளது.
செங்கல்பட்டு வரை சென்னைபெருநகர் ஆகிவிடும் என்ற நிலையில் மதுராந்தகம் வளர்ந்துவரும் புற நகராக உருவாகி கொண்டு இருப்பது உண்மை.

மதுராந்தகம் பகுதியில் கடந்த 5ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் கள பணியாற்றி கொண்டு இருப்பதால் ஒவ்வொரு கிராமத்தையும் பார்த்து கொண்டு இருப்பதால் 5ஆண்டுகளில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை உணர்ந்து இருக்கிறேன்.ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பவர்கள்,மனைகள்,பண்ணைகள்,சிறுதோட்டங்கள்

வாங்கிபோடலாம்.இப்பகுதிகளில் சொத்து வைத்து இருப்பவர்கள் தங்கள் சொத்துக்களை கவனிக்காமல் இருந்தாலோ பட்டா,சர்வே வேலைகளை செய்யாமல் இருந்தாலோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672

(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)



No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...