Wednesday, 15 December 2021

அருங்குணம் -ஊராட்சிமன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள்

  அருங்குணம் -ஊராட்சிமன்ற தலைவருக்கு

வாழ்த்துக்கள்


மதுராந்தகம்-அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக திரு.வி.யோகேஷ் பாபு அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டதை வாழ்த்தி சால்வை மற்றும் அவர் பெயர் படம் பொறித்த வாழ்த்து கேடயம் நான் வழங்கினேன்
திரு.யோகேஷ் பாபு இளைஞர்,வழக்கறிஞர் நல்ல வாசிப்பாளர். இந்த மழைகாலத்திலும் இரவு முழுதும் பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்கி களபணியாற்றும் தோழர்! ஒரு வகையில் எனக்கு தம்பி!
நிச்சயம் சமூகத்தை அடுத்த கட்ட நகர்விற்கு கொண்டு செல்லும் தலைவர்களில் யோகேஷ் பாபுவும் ஒரு வருங்கால நம்பிக்கை
அன்பை முன்வைத்து செய்யும் பக்குவம் அறிவை பின்பற்றும் நிதானம் இருக்கிறது! இன்னும் தன்னை ஆழமாக உணர்ந்து அதில் வேர்விட்டு கிளைத்து பலருக்கு நிழல் தர தன்னை தகுதி படுத்திக்கொள்ளும் களமாக ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
ஊராட்சியின் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பயன்பட வாழ்த்துகிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

No comments:

Post a Comment