Thursday, 10 June 2021

 சிவகங்கை சீமை மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம்!

 சிவகங்கை சீமை மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம்!




திருப்பத்தூர் டவுனிலே ஒரு நிலசிக்கலுக்கான களபணிக்கு சென்று இருந்தேன். அப்பொழுது பேருந்து நிறுத்தம் எதிரிலேயே மருது சகோதரர்கள் இருவரின தூக்கிலிடப்பட்ட நினைவு இடம் இருந்தது. தஞ்சை சரபோஜி, ஆற்காடு நவாபு, புதுகோட்டை சமஸ்தானம் போன்றவர்கள் போல வெள்ளையர்களிடம் சமரசம் செய்து கொண்டு இன்றுவரை அவரின் தலைமுறைகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம். ஆனால் வெள்ளையனிடம் அடங்க மறுத்து இருக்கின்றனர். போதாக்குறைக்கு ஊமைதுரைக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கின்றனர். இந்த நடவடிக்கைகளால் வெள்ளையர்கள் தூக்கில் இட்டு இருக்கின்றனர். தாரளமாக வீரமரணத்திற்காக போற்றபட வேண்டியவர்கள். பெயர் பலகையில் மாமன்னர் என்பது மட்டுமே மிகை! மருது சகோதரர்கள் பாளையக்கார்கள் தான்! மாமன்னர்கள் என்றால் சாம்ராட் அசோகர் ,மாமன்னர் அக்பர், அவுரங்க சீப் , மாமன்னர் இராஜராஜ சோழன், மாமன்னர் கிருஷண தேவராயர் ஆகியோர் தான்.
இப்படிக்கு
சா,மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9962265834
#paranjothipandian #land #problem #issue #writer #trainer #consulting #realestate #field #maruthu #avurangaksip #palayakkararkal #rajarajasholan #krishna_thevarayar #sivagangai

Monday, 7 June 2021

வளரும் வழக்கறிஞர் திருவைகுண்டம் மீரான்!!!

  வளரும் வழக்கறிஞர் திருவைகுண்டம் மீரான்!!!



வழக்கறிஞர் மீரான் அவர்கள் திருவைகுண்டத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். நிறைய வாசிப்பு, நிறைய தேடுதல் நிறைந்தவர். நிலம் உங்கள் எதிர்காலம் டெலிகிராம் குழுவில் நிறைய நேரம் முதலீடு செய்து இலவச ஆலோசனை வழங்கி வருகிறார். தூத்துகுடி பக்கம் களபணியாற்றும் பொழுது அவரையும் அவரின் சொந்த கிராமமான பேட் மாநகரம் கிராமத்திற்கு சென்று சந்தித்து நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்1 பாகம் 2 வழங்கினேன். எதிர்காலத்தில் மக்களுக்கான நல்ல வழக்கறிஞர் உருவாகிறார்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834

Tuesday, 1 June 2021

 நெல்லை சிலிகான் சிட்டி சைட்விசிட்!!

  நெல்லை சிலிகான் சிட்டி சைட்விசிட்!!



மருத்துவர் விவேக் திருநெல்வேலியை சேர்ந்தவர். எங்களது தவணைமுறை மனைபிரிவு திட்டங்களில் நம்பிக்கையான வாடிக்கையாளர். பஞ்சாயத்து அங்கீகாரம் நிறுத்தபட்டவுடன் மனைபிரிவு வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வது அநியாய தாமதம் செய்து வருகிறோம் அதனால் அதிருப்தியாய் இருந்தார். நெல்லை களபணி பொழுது சந்தித்து நிலைமையை விளக்கி சைட் விசிட் கூட்டி சென்றேன். இதுகாறும் நம்பிக்கையுடன் பொறுத்து இருக்கும் தவணைதிட்ட வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665836/9962265834

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...