Wednesday, 30 December 2020

இருப்பதற்கு நன்றியுணர்வு கொள்வோம்!!

  இருப்பதற்கு நன்றியுணர்வு கொள்வோம்!!



திரு.குணசேகரன் மாதவரம் மாற்று திறனாளி!
ஆழந்த சிந்தனையாளர்,சொத்து வாங்க வழிகாட்டுதல் வேண்டி சந்தித்தோம்.
புத்தக எடிட்டிங் வேலைக்காக 20 நாட்களுக்கு மேல் வடசென்னை கொளத்தூரில் தங்கிக் கொள்ள நல்ல ரூம் பரிந்துரையுங்கள் ஆன்லைனில் oyo வில் விலை அதிகமாக இருக்கறது என்றேன்.
ஆனால் அவரே தன் நண்பருடன் கொளத்தூரில் சுற்றி அலைந்து அசோக் விடுதியை புக்செய்து கொடுத்தார்
நம் நண்பர்கள் பலர் உடல் கைகால்கள் நன்றாக இருந்தும் முடி கொட்டுது, உயரம் கம்மி ன்னு புலம்பிகிட்டு இருக்காங்க!
இருக்கின்ற உடலுக்கு நன்றியுணர்வோடு இல்லாமல் !அப்படி இல்லாததை பற்றி நினைத்துக்கொண்டு இருக்கும் எதிர்மறை அரை கிறுக்கன்கள் நம்ம குணசேகரன் அண்ணனுடன் ஒரு தேநீர் சாப்பிடுங்கள்.
பேசாமலேயே நிறையப் பாடம் சொல்லிக் கொடுப்பார்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

Monday, 28 December 2020

தமிழக நூலகத்துறையே ! கொஞ்சம் கண்ணைத் திறந்துப் பாரப்பா!!

  தமிழக நூலகத்துறையே ! கொஞ்சம் கண்ணைத் திறந்துப் பாரப்பா!!



தமிழக அரசின் நூலகத்திற்கு எனது நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 பாகம் 2 என இரண்டு புத்தகத்தையும் தமிழக அரசின் நூலகத்துறையில் வைப்பதற்கு மாதிரிகளை அனுப்பியுள்ளேன்.
டெல்லி, கல்கத்தா, மும்பை, சென்னை, கன்னிமாரா போன்ற நூலகங்களுக்கு ஒரு மாதிரி புத்தகத்தைத் தபாலில் அனுப்பி இரண்டுப் படிவங்கள் நிரப்பி ரூபாய் 100 கட்டணமாகக் கட்டி புத்தகத்தின் soft copy ஐ சிடியில் வைத்து ஒப்படைக்கச் சொல்லி இருந்தார்கள்.அனைத்தையும் செவ்வனே செய்து முடித்துவிட்டேன்.
நூலகமே இனி உன் கடமைதான் !
நீ நூலகத்திற்காகப் புத்தகங்களை வாங்கினால் நிலத்தை பற்றிய அறிவு இன்னும் பலரிடம் சென்று சேரும்!
நண்பர்கள் யாராவது நூலக ஆர்டர் பெற்றுக் கொடுக்க உதவினாலும் பேருதவியாக இருக்கும்.
நூலகத் துறையே நல்ல செய்திக்காகக் காத்து இருக்கிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழிலமுனைவர்

Sunday, 27 December 2020

பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!

  பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!

 

அப்ரூவ்டு மேட்டர் தான் டிடிசிபி க்கு போயிடுச்சே இனி என்ன ஜோலி ரியல்எஸ்டேட் காரங்ககிட்ட
வீட்டு மனை உருவாக்கும் தொழிலில் வட்டிக்கு முதல் திரட்டி மனைப்பிரிவுகள் விற்பனை செய்து நாலு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அயராது உழைக்கின்ற ரியல்எஸ்டேட் தொழில் முனைவோர்களின்வழிப்பறி செய்வது போல் செய்யலாமா!
கடந்த 20 வருடமாக உங்களிடம் பஞ்சாயத்து தலைவர்கள் வார்டு மெம்பர்கள் என்று ஒவ்வொருவருக்கும் கப்பம் கட்டித் தானே பஞ்சாயத்து NOC மனைகளைப் போட்டோம்
அப்பொழுது அங்கீகாரம் பற்றி அரசே ஒழுங்கா கொள்கை முடிவு எடுக்கவில்லை!
அப்பொழுது உருவாக்கிய மனைகளை இன்று விதி மீறல்கள் ஏன் போர்டு வைக்கிறீர்கள்!
இப்பொழுது டிடிசிபி வரன்முறை படுத்துதல் அங்கீகாரம் வாங்க ஓலை அனுப்பி இருக்கிறார்கள்!!
அதற்கு அவர்களுக்கு கப்பம் கட்டத் தானே நாங்கள் கடன் வாங்கி பணம் பிரட்டிக் கொண்டு இருக்கிறோம்.
வேலை புராசாஸ்ல இருக்கும்பொழுதே நீங்கள் அறிவிப்பு போர்டு வைத்து பொதுமக்களை பயமுறுத்தலாமா!!
டிடிசிபியில் அங்கீகாரம் அரசுக் கட்டணம் மட்டும் கட்டச் சொல்லி வேலையை ஒரு வருடம் இழுக்காமல் இருந்தால் தான் நாங்கள் எல்லா அங்கீகாரமும் வாங்கி விடுவோமே!
அதற்குள் நீங்கள் எதற்கு அறிவிப்பு பலகை வைக்கிறீர்கள் அங்கீகாரம் வாங்க வில்லை என்று!!
அந்த சைட் லாம் பாருப்பா டோசர் அடிக்க முடியாம களையா இருக்கு!!!
வியாபாரம் ஆகாத இடத்துக்கு எதுக்குப்பா அறிவிப்பு!!
உங்களிடம் இனி வரவே தேவை இருக்காது இனி டிடிசிபி AD யவே நாங்கள் உருவி விட்டு கொள்ளாலாம் என்று நினைத்தால் நீங்களும் அவிழ்த்துப் போட்டு நின்றால் எப்படி!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்

புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!

  புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!

 

ரியல்எஸ்டேட் களப் பணிக்காக பழைய வேட்டவலம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த ஆலம்பாடி கிராமத்திற்குச் சென்று இருந்தேன். 
விழுப்புரம் டூ திருக்கோயிலூர் சாலை டூ வீலர் பயணத்திற்கு ஏற்ற அழகான சாலை
சாலையின் இருபக்கத்தில் பெரியப் பெரிய குடைப்போல் நிழல் விரித்து இருக்கும் புளியமரங்கள் மரங்கள், இப்படி மரங்கள் இருப்பதால் வெயில் தெரியாதப் பயணம் செய்தேன்.
இதுபோல 1970 களில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் பல புளியமர சாலைகள் எல்லாம் இப்பொழுது சாலை விரிவாக்கத்தில் பிய்த்து எடுத்துவிட்டார்கள்.
இப்பொழுது அருகி போய் இருக்கும் புளியமர நிழற்சாலைகளில் விழுப்புரம் -திருக்கோயிலூர் சிறப்பான சாலை.இனிவருங்காலங்களில் சாலை விரிவாக்கம் செய்தால் புளியமரத்தில் கை வைக்காமல் இருக்க விழுப்புரம் மாவட்டத்தினர் காவலாக இருக்க வேண்டிகிறேன்
 
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
www.paranjothipandian.in
 
#jameen #realstate #field #paranjothi_pandian #viluppuram #Tamarind_Tree

எனக்கானப் போதிமரம் இந்த கடல் மங்கை!!

  என்னுடைய போதிமரம்!



கடந்த 18 ஆண்டுகளின் தொழில்முனைவு பயணங்களில் எனக்குள் நடக்கின்ற பல்வேறு மன போராட்டங்களுக்கு விடைகளை இந்த கடல்தாயிடம் வந்து அமரந்து அதனுடன் பேசி முடிவு எடுத்துகொள்வேன்.
பல்வேறு நபர்களுக்கு நான் ஆறுதல், ஹீலர், உந்துசக்தி, ஆனல் எனக்கு வலி தொய்வு களைப்பு போன்றவை ஏற்படும் பொழுது எல்லாம் அழகான கடல்தான் இளைப்பாறுதல்!
தெளிவற்று இருக்கும் பொழுது இந்தக் கடலின் இரைச்சல் அனைத்தையும் சீராக்கிவிடும்.
ஒன்றே ஒன்றுதான் எனக்குப் பாடம் அலைகள் ஓய்வதில்லை நீயும் ஓயாமல் உழைத்துக்கொண்டு இரு!!
இந்த கடலில் உன் அஸ்தி கரைக்கும் வரை!!
எனக்கானப் போதிமரம் இந்த கடல் மங்கை!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
 
 

Tuesday, 15 December 2020

ஊத்தங்கரையில் மலர்ந்து நிற்கும் ஒரு ஆடிட்டர் !!!

  ஊத்தங்கரையில் மலர்ந்து நிற்கும் ஒரு ஆடிட்டர் !!!



பன்னாட்டு நிறுவனத்தில் இலட்சங்களில் ஊதியம் சென்னை பெங்களூர் என்று சம்பாத்தியம் வாழ்க்கை என்று இருந்த ஆடிட்டருக்கு சொந்த ஊரில் அவருடைய உணர்வின் வேர்கள் ஆழமாக ஊடுருவி இருந்ததால்.

ஊரில் தொழில் செய்யத் தன்னுடைய அலுவலகத்தை ஊத்தங்கரை ரவுண்டானாவில் லோகநாதன் சேகர் ஆடிட்டர் என்ற முத்திரையுடன் திறந்துவிட்டார்.
எனக்கு பல ஆண்டுகள் முகநூல் நண்பர்,ஒரு சில விஷயங்களில் எனது நிறுவனத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்.

ரியல்எஸ்டேட் களப்பணிக்காக பெங்களூர் சென்றப் பொழுது நன்றி நிமித்தமாக ஊத்தங்கரையில் ஆடிட்டரை சந்தித்துவிட முடிவுசெய்து அவரை சந்தித்தேன். நிறைய விஷயங்களில் எனக்கும் அவருக்கும் கருத்தொற்றுமை இருக்கிறது.

வருங்காலங்களில் நம்முடன் அதிகம் பயணிக்கும் உறுதுணை ஆடிட்டர்.தொழில் முனைவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய மனிதர். நான் பயனடைந்து இருக்கிறேன் அதனால் பரிந்துரைக்கிறேன்.

பயன்படுத்திகொள்ளுங்கள்! தொழில் வாழ்வில் வெற்றிக் கொள்ளுங்கள்!!!

இப்படிக்கு,

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
www.paranjothipandian.in
9841665836,9841665837

#ஊத்தங்கரை #ஆடிட்டர் #லோகநாதன்சேகர் #தொழில் #தொழில்முனைவர் #கணக்கு #auditor #லோகனதன்செகர் #account

புதுச்சேரி தொல்காப்பியர் இலஞ்ச ஒழிப்பு படையினருடன் சந்திப்பு!!!

 புதுச்சேரி தொல்காப்பியர் இலஞ்ச ஒழிப்பு படையினருடன் சந்திப்பு!!!



 
ஓய்வு பெற்ற புதுச்சேரி காவல்துறை ஆய்வாளரால் உருவாக்கபட்டு புதுவை புலனாய்வு என்ற பெயரில் அரசின் இலஞ்ச ஊழல்களை வெளிகொணருகின்ற வேலைகளை செய்கின்றார்கள்.
நில சிக்கலில் அவர்களுக்கு பல்வேறு புதிர்கள் இருந்து இருக்கிறது.
அத்தனை முடிச்சுகளையும் அவிழ்க்க ரூம் போட்டு பாண்டிசேரி வரவழைத்துவிட்டனர்.
நான்கு மணிநேர இடைவிடாத உரையாடல் அனைத்துக்கும் விடை கிடைத்து கிளம்பி சென்றனர்
இப்படிக்கு,
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
 
 
 

நில சிக்கலுக்கான கள பணி ஆய்வு !!!

  நில சிக்கலுக்கான கள பணி ஆய்வு !!!

துபாயில் இருக்கின்ற நண்பர் ஒருவருக்கு மன உளைச்சல் கொடுக்கும் ஒரு நில சிக்கல் தான் வாங்கிய மனை தன்னுடைய எதிர் மனுதார்கள் பெரிய காம்பவுண்டு சுவர் போட்டு தங்கள் அனு போகத்திற்கும் கட்டுபாட்டிற்கும் கொண்டு வந்து வழக்கும் போட்டு நீண்ட நாட்களாக இழுத்து கொண்டு இருக்கிறது

வழக்கின் பொறுப்பை தந்தைக்கு பிறகு துபாயில் இருக்கிற தனயன் எடுத்து என்னை யுடுபில் பிடித்து பல்வேறு உரையாடல்கள் உரையாடியும் எனக்கு போதுமான தெளிவு வரவில்லை. எனவே சைட் விசிட் செய்ய தீர்மானித்து 100 கி. மீட்டர் பயணித்து பிரச்சனைக்குரிய இடத்தையும் பார்வையிட்டேன். எனக்கு தேவையான தகவல்களை எல்லாம் தந்தையார் கொடுத்தார்.

என்ன அசௌகரியம் என்றால் அமர்ந்து பேச ஒரு இடம் இல்லை அப்படிபட்ட லொகேசன். இருந்தாலும் வெளிச்சமான இடத்தை பார்த்து என் பையில் ரெடிமேடாக வைத்து இருக்கிற துண்டை (நாமெல்லாம் பஸ் ஸ்டாண்டில் துண்டு விரித்து படுக்கிற ஆள்
என்று அவருக்கு தெரியாது) விரித்து இதில் அமருங்கள் என்று சொன்ன பிறகு தான் என்ன சார் எல்லாம் ரெடியாக வைத்து இருக்கிறீர்கள் என்று சொல்லியவாறு ஆசைவாசம் அடைந்து அமர்ந்தார்

நீங்கள் தரையில் இருக்றீர்கள் எனக்கு மட்டும் துண்டா என்றார். அய்யா நான் மிலிட்டிரி பேண்ட் அழுக்கு தெரியாது நீங்கள் தும்பைபூ வேட்டி அதனால் என் துண்டில் அமருங்கள் என்று அமர வைத்து என் சந்தேகங்களுக்கு பதில் எல்லாம் பெற்று என் லேப்டாப்பில் ஏற்றிகொண்டு கிளம்பினேன்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
www.paranjothipandian.in


ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...